தற்செயலாக துப்பாக்கி வெடித்திருந்தால் நாங்கள் கொலை செய்ய முயன்றதாகவும், அவர் திருப்பி சுட்டதாகவும் கதை கட்டியிருப்பார்கள். தமிழ் அரசியல் கைதிகள் ஆதங்கம்..

ஆசிரியர் - Editor I
தற்செயலாக துப்பாக்கி வெடித்திருந்தால் நாங்கள் கொலை செய்ய முயன்றதாகவும், அவர் திருப்பி சுட்டதாகவும் கதை கட்டியிருப்பார்கள். தமிழ் அரசியல் கைதிகள் ஆதங்கம்..

அமைச்சர் லொகான் ரத்வத்தையின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்திருந்தால் விடுதலைப்புலிகள் சந்தேகநபர்களான நாங்கள் அவரை கொலை செய்ய முயன்றதால் பதிலுக்கு அவர் சுட்டார் என கதை கட்டியிருப்பார்கள்.

மேற்கண்டவாறு அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தன்னிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் சிறை கைதிகளை நோில் சந்தித்து கலந்துரையாடிய பின் 

கருத்து தொிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார், இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, உள்ளே சென்றபோது ஊடகங்களில் வந்த அனைத்து செய்திகளும் உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லொகான் ரத்வத்தை என்ற அமைச்சர் மதுபோதையில் வந்தார் துப்பாக்கியுடன் வந்தார் என அங்கே இருக்ககூடிய சிறைக்கைதிகள் எங்களிற்கு நேரடியாக தெரிவித்தனர். அவர் மதுபோதையிலிருந்ததால் துப்பாக்கியை எடுத்து லோட் செய்து 

தன்முன்னால் நீட்டியதாக ஒரு சிறைக்கைதி தெரிவித்தார். சற்று பிசகியிருந்தால் அது வெடித்திருக்கும் அது வெடித்திருந்தால் தாங்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் சந்தேகநபர்கள் என்பதால் அவரை கொலை செய்ய முயன்றதாகவும் 

பதிலுக்கு அவர் சுட்டதாகவும் கலவரம் நிகழ்ந்ததாகவும் கதை கட்டியிருப்பார்கள் என கைதிகள் எங்களிடம் தெரிவித்தனர்.எவ்வளவு பரிதாபமான கதை இது தேவையா?

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு