யாழ்.உடுவிலில் இராணுவ புலனாய்வு பிரிவினால் 3 வாள்கள் மீட்பு! வாள்வெட்டுக்கு தயாரானபோது சுற்றிவளைப்பாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவிலில் இராணுவ புலனாய்வு பிரிவினால் 3 வாள்கள் மீட்பு! வாள்வெட்டுக்கு தயாரானபோது சுற்றிவளைப்பாம்..

யாழ்.உடுவில் பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளது. 

உடுவில் கிழக்கு பகுதியில் உள்ள தோட்ட காணியொன்றில் இருந்தே குறித்த 3 வாள்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

தாக்குதல் ஒன்றுக்கு தயாராக இருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை 

இராணுவ புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டபோதே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு