யாழ்.அச்சுவேலியில் வாள்வெட்டுகுழு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்! நடவடிக்கை எடுக்க தயங்கும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் வாள்வெட்டுகுழு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்! நடவடிக்கை எடுக்க தயங்கும் பொலிஸார்..

யாழ்.அச்சுவேலியில் நேற்றய தினம் இரவு 11 மணியளவில் வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, அச்சுவேலி மேற்கு , ஜோன்ராஜா வீதியில் கைக்குழந்தையுடன் வசித்து வரும் இளம் தம்பதியினரின் வீட்டினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் மூவர் அடங்கிய கும்பல் ஒன்று புகுந்து 

வீட்டின் கேட், யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் என்பவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டு அவற்றை சேதப்படுத்தி , வீட்டில் இருந்த தம்பதியினரையும் மிரட்டி விட்டு சென்று இருந்தனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் 

சுமார் 1 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருள் சேதமாகியுள்ளது. அது தொடர்பில் இரவே அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர். இருந்த போதும் இன்றைய தினம் காலை 10 மணி வரையில் 

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அதனால் நேற்றைய தினம் இரவு முழுவதும் வீட்டில் இருந்தோர் அச்சத்துடனே காணப்பட்டுள்ளனர்.  காலை 10 மணி வரையில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீடு , அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு