யாழ்.மாவட்டத்தில் மோசடி வியாபாரிகள், பதுக்கல் வியாபாரிகளை கண்டுபிடிக்க மேலும் 65 ஊழியர்கள் களத்தில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மோசடி வியாபாரிகள், பதுக்கல் வியாபாரிகளை கண்டுபிடிக்க மேலும் 65 ஊழியர்கள் களத்தில்..

யாழ்.மாவட்டத்தில் நுகர்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக 65 பட்டதாரி பயிலுனர்கள் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலும் இருந்து அதற்கான உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளுக்கு அதிகமாகப் பொருட்களை விற்பனை செய்தல்,பொருட்களைப் பதுக்கி வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளை குறித்த உத்தியோகத்தர்கள் கண்காணிக்க உள்ளனர்.

இக் கண்காணிப்பு நடவடிக்கை இம்மாதம்  30ஆம் திகதிவரை நாடு பூராகச் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு