யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 வயது குழந்தை உட்பட 3 குழந்தைகளுக்கும், 3 சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 வயது குழந்தை உட்பட 3 குழந்தைகளுக்கும், 3 சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு தயாராக இருந்த 2 வயதான குழந்தை உட்பட யாழ்.மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யப்படவிருந்த 2 வயதான குழந்தை மற்றும், சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 

2 வயதும் 6 மாதங்களுமான பெண் குழந்தை, யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 

3 வயதும் 8 மாதங்களுமான ஆண் குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகளுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது. 

மேலும் 6 வயதான சிறுவன் மற்றும் 8, 10 வயது சிறுமிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு