மறைந்த ஊடகவியலாளருக்கு சுமந்திரன், சாணக்கியன் அஞ்சலி!

ஆசிரியர் - Admin
மறைந்த ஊடகவியலாளருக்கு சுமந்திரன், சாணக்கியன் அஞ்சலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அண்மையில் காலமான இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் திருவுருவப்படத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டியிலுள்ள பிரகாஷின் வீட்டுக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அன்னாரின் திருவுருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு