யாழ்.பொம்மை வெளியில் விபத்தில் சிக்கிய பால் வியாபாரி உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொம்மை வெளியில் விபத்தில் சிக்கிய பால் வியாபாரி உயிரிழப்பு!

யாழ்.நகரில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் சின்னத்தம்பி- சாந்தகுணமூர்த்தி (வயது 67) என்ற பொம்மைவெளி யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதியவரே உயிரிழந்தவராவார்.

துவிச்சக்கர வண்டியில் பால் விற்பனையில் ஈடுபடும் இந்த முதியவர் வழமைபோன்று பால் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் மீது

வீட்டு வாசலில் வைத்து மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு