யாழ்.வல்வெட்டித்துறையில் இரு பிள்ளைகளின் தந்தையை கொலை செய்யப்பட்ட சம்பவம்! 2 வாரங்கள் தலைமறைவாக இருந்தவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறையில் இரு பிள்ளைகளின் தந்தையை கொலை செய்யப்பட்ட சம்பவம்! 2 வாரங்கள் தலைமறைவாக இருந்தவர் கைது..

யாழ்.வல்வெட்டித்துறையில் குடும்பஸ்த்தரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குடும்ப தகராறால் இரு பிள்ளைகளின் தந்தையான சு.கிரிஷாந்தன் (வயது30) என்பவர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் சந்தேகநபர்கள் இருவர் தலைமறைவாகியிருந்தனர். 

அவர்களில் ஒருவரான 41 வயது நபர் திருகோணமலையில் பகுதியிருப்பது தொடர்பாக யாழ்.பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்திருந்த இரகசிய தகவலையடுத்து திருகோணமலை பொலிஸார் உதவியுடன் 

இன்று காலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இதேவேளை மேலும் ஒருவர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ள நிலையில் தொடர்ந்தும் தேடுதல் இடம்பெறுவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு