யாழ்.மாவட்டத்தில் தொடரும் தீவிர அபாயம்! மேலும் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மொத்தம் 15 ஆயிரத்தை கடந்தது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் தீவிர அபாயம்! மேலும் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மொத்தம் 15 ஆயிரத்தை கடந்தது..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலக மற்றும் சுகாதாரத்துறை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 67 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 132 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 15037 ஆக உயர்ந்திருக்கின்றது. 

இதேவேளை மாவட்டத்தின் நிலைமை தொடர்ந்தும் அபாயகரமானதாக உள்ளதால் மக்கள் பொறுப்புடன் செயற்படுமாறு மாவட்டச் செயலர் கேட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு