யாழ்.செம்மணி பகுதியில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

ஆசிரியர் - Editor I
யாழ்.செம்மணி பகுதியில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

யாழ்.செம்மணி பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனை செய்துவந்த 4 பேரை பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்திருக்கின்றனர். 

இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 180 லீற்றர் கோடா மற்றும் 20 லீற்றர் கசிப்பு ஆகியன மீட்கப்பட்டிருக்கின்றது. 

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு