யாழ்.மாவட்டத்தில் தொடரும் தீவிர அபாயம்! மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் மரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் தீவிர அபாயம்! மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் மரணம்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுழிபுரத்தை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரும், சாவகச்சோியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவரும், 

காரைநகரை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவரும், யாழ்.வேம்படி பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவரும், அரியாலையை சேர்ந்த 81 வயதான ஆண் ஒருவரும், 

தென்மராட்சியில் மீசாலை மேற்கை சேர்ந்த 91 வயதான பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது. 

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 317 ஆக உயர்ந்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு