யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகளை நோில் ஆராய்ந்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகளை நோில் ஆராய்ந்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ..!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் பாரிய அபிவிருத்தி பணிகளை கண்காணிப்பதற்காக துறைசார் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றார். 

இன்று மதியம் வருகைதந்த அமைச்சர் சென் பொஸ்கோ பாடசாலை அருகில் புனரமைக்கப்பட்டுவரும் குளம் , ஐ திட்ட வீதியையும், ஆஸ்பத்திரி வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டம்,

யாழ்.மாநகர சபை புதிய கட்டடம் என்பவற்றை பார்வையிட்டார்.நாமல் ராஜபக்ஷ அவர்கள் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டுவரும் 

அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அமைச்சரின் விஜயம் அமைந்தது. இதன் போது யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் எம்.பியுமான அங்கஜன் இராமநாதன்,

எம்.பி.சுரேன் ராகவன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் ,யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன்,யாழ்ப்பாண பிரதேச செயலர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேலும் பாசையூரில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள், 

விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் புனரமைக்கப்படவுள்ள நல்லூர் கலைமகள் விளையாட்டு மைதானம்,பல்பரிமாண நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உள்ள மருதனார்மடம், மத்திய கல்வி அமைச்சின் கீழ் இடம்பெற்று வருகின்ற 

தெல்லிப்பளை அருணோதயா பாடசாலைக் கட்டடம், வறுத்தலைவிளானில் காணியற்ற குடும்பங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தி திட்டங்கள்,நாவற்குழியில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் விநியோக திட்டத்தையும் பார்வையிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு