யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவானது! 307 ஆக உயர்ந்த மொத்த எண்ணிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவானது! 307 ஆக உயர்ந்த மொத்த எண்ணிக்கை..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி பருத்தித்துறை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார், 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 81 வயதான ஆண் ஒருவர், 

கோண்டாவிலை சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர், வட்டுக்கோட்டையை சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு