யாழ்.மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கொரோனா அபாயம் தீவிரமாக தொடர்கிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கொரோனா அபாயம் தீவிரமாக தொடர்கிறது..

யாழ்.மாவட்டத்தில் 280 பேருக்கு நேற்றய தினம் செவ்வாய் கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 74 தொற்றாளர்களும் அன்டிஜன் பரிசோதனையில் 206 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர். 

இந்நிலையில் மாவட்டத்தின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 244 ஆக உயர்வடைந்துள்ளது. 

மொத்த மரணங்கள் நேற்று மாலை வரை 289 ஆக உயர்வடைந்துள்ளது. மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு ஊரடங்கு வேளையில் 

உள்ளூர் பிரதேசங்களில் அதிக நடமாட்டம் இருப்வது அவதானிக்கப்பட்டுள்ளது.மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து வீடுகளில் தங்கியிருப்பதுடன், 

தடுப்பூசிகளையும் தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.  பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பின் மூலம் மாவட்டத்தின் நிலைமைகளை விரைவில் 

சரி செய்ய உதவுவும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு