தெருச் சண்டியனாக மாறிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் காட்டுமிராண்டித்தனம்! சகோதரர்கள் இருவர் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
தெருச் சண்டியனாக மாறிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் காட்டுமிராண்டித்தனம்! சகோதரர்கள் இருவர் வைத்தியசாலையில்..

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் கடந்த 5ம் திகதி இரவு 8 மணியளவில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவசர தேவை கருதி தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் தனது ஊந்துருளிக்கு எரிபொருள் நிரப்பி விட்டு வீடு திரும்பிய இரு சகோதரர்கள் மீதே மோட்டார் வாகனத்தை நிறுத்தி துப்பாக்கியால் சராமாரியாக முகத்தில் தாக்குதல் நடத்தப்படுள்ளது.

காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டு முகத்தில் பல தையல்களுடன் அனுமதிக்கபட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தினேஷ் 8656 எனும் இலக்கம் உடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் நாட்டில் தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு