யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 124 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை முடிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 124 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை முடிவு..

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் உட்பட வடக்கில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனைகளிலேயே 124 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

யாழ்.மாவட்டத்தில் 25 பேருக்கு தொற்று. 

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 09 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 08 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 04 பேருக்கும், 

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும் 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், 

வவுனியா மாவட்டத்தில் 57 பேருக்கு தொற்று.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 44 பேருக்கும்,வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 06 பேருக்கும்,செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 06 பேருக்கும், 

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 08 பேருக்கும், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 பேருக்கு தொற்று.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 11 பேருக்கும், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 07 பேருக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் 03 பேருக்கும், 

பலாலி விமானப்படை முகாமில் 05 பேருக்கும், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 03 பேருக்கும், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும், 

மன்னார் கடற்படை முகாமில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு