கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று முன்தினம் வீடு திரும்பியவர் நேற்று மரணம்! தொற்றும் உறுதி, யாழ்.பருத்தித்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று முன்தினம் வீடு திரும்பியவர் நேற்று மரணம்! தொற்றும் உறுதி, யாழ்.பருத்தித்துறையில் சம்பவம்..

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவர் உயிரிழந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.பருத்தித்துறையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், 

மந்திகை வைத்தியசாலையில் 10 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் குணடைந்ததாக வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். 

விடு சென்றவர் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 85 வயதான பெண் சாவகச்சோி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 

அவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்தபோதே உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு