யாழ். மாவட்ட மக்களுக்கு ஆறுதலான தகவலை வெளியிட்ட மாவட்ட செயலர்! சுகாதார நடைமுறைகை மதித்து ஒத்துழையுங்கள் எனவும் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ். மாவட்ட மக்களுக்கு ஆறுதலான தகவலை வெளியிட்ட மாவட்ட செயலர்! சுகாதார நடைமுறைகை மதித்து ஒத்துழையுங்கள் எனவும் கோரிக்கை..

யாழ்.மாவட்டதில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும். எனவும் கேட்டுள்ளார். 

மாவட்டத்தின் சமகால நிலமைகள் தொடர்பாக இன்று மாவட்டச் செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை 

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற போக்கு சற்று குறைவடைந்து காணப்படுகின்றது .யாழில் நேற்று 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மொத்தமாக 13 ஆயிரத்து 944 பேர் மாவட்டத்தில் இன்று வரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.இறப்புக்களை பொறுத்தவரை 274 ஆக அதிகரித்துள்ளது அதேநேரம் 5641 குடும்பங்கள் யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 

என அவர் மேலும் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு