யாழ்.நெல்லியடியில் ஏழை மக்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 10 லட்சம் தானம் வழங்கிய வள்ளல்! பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்..(படங்கள் இணைப்பு)

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் ஏழை மக்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 10 லட்சம் தானம் வழங்கிய வள்ளல்! பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்..(படங்கள் இணைப்பு)

யாழ்.நெல்லியடி - இரும்பு மதவடி பகுதியில் வைத்து வறிய மக்களுக்காக சுமார் 10 லட்சம் ரூபாய் பணத்தை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வள்ளல் ஒருவர் பகிர்ந்து கொடுத்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நெல்லியடி பகுதியை சேர்ந்த வள்ளல் ஒருவர் வடமராட்சியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்து 

தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் பணத்தை தானமாக வழங்கியுள்ளார். இதனால் நெல்லியடி இரும்பு மதவடி பகுதியில் மக்கள் அதிகளவில் கூடியுள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லியடி பொலிஸார் வள்ளலை பொலிஸ் நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். 

எனினும் அவர் கைது செய்யப்படவோ, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவோ இல்லை என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு