ஊடகவியலாளர் ஞா.பிரகாஷின் பூதவுடன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இன்று தகனம் செய்யப்பட்டது!

ஆசிரியர் - Editor I
ஊடகவியலாளர் ஞா.பிரகாஷின் பூதவுடன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இன்று தகனம் செய்யப்பட்டது!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் பூதவுடன் இன்று சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்பட்டுள்ளது. 

கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26) கடந்த வாரம் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02ஆம் திகதி உயிரிழந்திருந்தார். 

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. 

அத்துடன் அவரது அஸ்தி அல்லாரை புதிய செபமாலை அன்னை தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

சுயாதீன ஊடகவியலாளரான, பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார். அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் 

ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு