யாழ்.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் கடற்படை சுற்றிவளைப்பு! 227 கிலோ கஞ்சா மீட்பு, கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் கடற்படை சுற்றிவளைப்பு! 227 கிலோ கஞ்சா மீட்பு, கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்..

யாழ்.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் பகுதியில் சுமார் 227 கிலோ கேரள கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்று மீட்கப்பட்டிருக்கின்றது. 

இரகசிய தகவல் ஒன்றையடுத்து கடற்படையினர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பித்துச் சென்றுள்ள நிலையில் மீட்கப்பட்ட படகும் கஞ்சாப் பொதிகளும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவை பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு