யாழ்.காரைநகரில் சுகாதார நடைமுறையை மீறி திருமண கொண்டாட்டம்! பொது வைத்திய அதிகாரி மீது தாக்குதல் முயற்சி, 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் சுகாதார நடைமுறையை மீறி திருமண கொண்டாட்டம்! பொது வைத்திய அதிகாரி மீது தாக்குதல் முயற்சி, 3 பேர் கைது..

கோப்புபடம்

யாழ்.காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவானோர் கலந்து கொண்டு திருமண நிகழ்வு நடத்தியமை தொடர்பில் நடவடிக்கை எடுத்த சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் மீதும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகரில் பெருமெடுப்பில் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு திருமண நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. குறித்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில் சுகாதார பிரிவினார் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தியதுடன், 

அவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.  இதனடிப்படையில் நேற்றய தினம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள சென்றிருந்தபோது பீ.சி.ஆர் பரிசோதனை உபகரணங்களை வீசியதுடன், பொது வைத்திய அதிகாரியை 2 தடவைகள்

தாக்குவதற்கு முயற்சித்ததுடன், பொதுச்சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குள் நுழைந்த பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு