யாழ்.மாவட்டத்தில் நிலைமை மோசம்! மேலும் 201 பேருக்கு தொற்று, ஒத்துழைப்பு தாருங்கள், மக்களிடம் மாவட்ட செயலர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நிலைமை மோசம்! மேலும் 201 பேருக்கு தொற்று, ஒத்துழைப்பு தாருங்கள், மக்களிடம் மாவட்ட செயலர் கோரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாக 200க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் சராசரியாக இனங்காணப்பட்டு வரும் நிலையில் 

 எண்ணிக்கைகள் மேலும் உயர்வடைய வாய்ப்புண்டு. மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 37 தொற்றாளர்கள் 

இனங்காணப்பட்டுள்ளதுடன் அன்டிஜன் பரிசோதனையில் 164 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை மாவட்டத்தில் 272 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில் மக்கள் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நடமாட்டம் தென்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆகவே சுகாதாரத் துறையினர் மக்களுக்கு வழங்கிய சந்தர்ப்பத்தை மிகவும் பொறுப்புடன் எண்ணி மக்கள் தத்தமது வீடுகளில் இயன்றவரை முடங்கி 

கொரோனாத் தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு