யாழ்.காரைநகரில் திருமண கொண்டாட்டம்! கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் திருமண கொண்டாட்டம்! கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தலில்..

யாழ்.காரைநகரில் சுகாதார நடைமுறைகள் எவையுமில்லாமல் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

காரைநகர் அல்வின் வீதியில் கடந்த புதன் கிழமை (01) குறித்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றிருப்பதாகவும் முகநூல்களில் படங்கள் பகிரப்பட்டதன் ஊடாகவும்

ம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒளிப்படங்களில் காணப்பட்டவர்கள் எவரும் முகக்கவசம் கூட அணிந்திருக்காத நிலையில் 

சுகாதாரத் துறையினர் அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருப்பதாக சுகாதாரத் தரப்புக்கள் தொிவித்தன. 

நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு நிலைமை மிகமோசமாகக் காணப்படும் சூழலில் இவ்வாறு நடந்துகொள்வது மோசமான செயற்பாடாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு