யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவானது..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாங்குளத்தை சேர்ந்த 79 வயதான ஒருவர், கச்சோி- நல்லுார் வீதியை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர், 

யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்ட 82 வயதான முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் நெல்லியடி கரணவாய் பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவர் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போது உயிரிழந்துள்ளார். 

அவருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. அதேபோல் சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் 

இயற்றாலை பகுதியை சேர்ந்த 86 வயதான பெண் ஒருவரும், நுணாவில் பகுதியை சேர்ந்த 90 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் மாவட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு