யாழ்.கொக்குவில் பகுதியில் பொலிஸார், இராணுவம் இணைந்து சுற்றிவளைப்பு சோதனை! வாள்வெட்டு குழுக்களை இலக்குவைத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் பகுதியில் பொலிஸார், இராணுவம் இணைந்து சுற்றிவளைப்பு சோதனை! வாள்வெட்டு குழுக்களை இலக்குவைத்து..

யாழ்.கொக்குவில் பகுதியில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையில் இன்று அதிகாலை ராணுவம் மற்றும் பொலீசாரால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அவ்விடங்களில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை 

நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் பொலீசாரால் கொக்குவிலில் ஒரு பகுதியானது சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகத்துக்கிடமான வீடுகளில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இன்று அதிகாலை திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக மாவட்டத்தில் ஊரடங்கு வேளைகளில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் பமற்றும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு