மின்னல் தாக்கியதில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு! யாழ்.அச்சுவேலி - நாவற்காடு பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மின்னல் தாக்கியதில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு! யாழ்.அச்சுவேலி - நாவற்காடு பகுதியில் சம்பவம்..

மின்னல் தாக்கியதில் இ.போ.ச பேருந்து சாரதியான இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். 

அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.சம்பவத்தில் உடுப்பிட்டியைச் சேர்ந்த தியாகராஜா மதனபாலன் (வயது 41) என்பவரே உயிரிழந்தார். 

வயலில் உழவில் ஈடுபட்ட போது சம்பவம் இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு