யாழ்.சாவகச்சோியில் 103 பேருக்கு எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் 103 பேருக்கு எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..

யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சுமார் 103 பேருக்கு இன்று எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதிலே 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

அவர்களில் ஒருவர் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் என்றும் அவருடைய மனைவி தென்மராட்சி பிரதேச செயகத்தின் கீழ் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தராவார்.

குறித்த தொற்றாளர்களை கொரோனா கண்காணிப்புக்கு உட்படுத்த சுகாதாரத்தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு