வியாபாரத்திற்காக கொண்டுவந்த மரக்கறிகளை கைவிட்டு ஓடிய வியாபாரிகள்! யாழ்.திருநெல்வேலி சிவனம்மன் கோவிலடியில் இன்று காலை..

ஆசிரியர் - Editor I
வியாபாரத்திற்காக கொண்டுவந்த மரக்கறிகளை கைவிட்டு ஓடிய வியாபாரிகள்! யாழ்.திருநெல்வேலி சிவனம்மன் கோவிலடியில் இன்று காலை..

யாழ்.திருநெல்வேலி சிவன் அம்மன் கோவிலடியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பொலிஸார் வருவதைக் கண்டதும் மரக்கறிகளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது, மேற்படி இரு ஆலயங்களினதும் சுற்றாடலில் மரக்கறி வியாபாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் அதிகளவில்

அங்கு கூடுவதனை கருத்திக் கொண்ட பொலிஸார் வியாபாரிகளை வெளியேற்றியிருந்தனர். இந்நிலையில் மீண்டும் இன்று வியாபாரம் இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து இன்று காலை கோப்பாய் பொலிஸார் வாகனம் அவ்விடத்திற்கு வந்தபோது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் 

தமது வியாபார பொருட்களையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர். எனினும் பொலிசார் திரும்பி சென்ற பின்னர் தமது மரக்கறி பொருட்களை எடுத்து சென்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு