யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் சிலருக்கு தொற்று அறிகுறி! இன்று மீளவும் அன்டிஜன் பரிசோதனைக்கு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் சிலருக்கு தொற்று அறிகுறி! இன்று மீளவும் அன்டிஜன் பரிசோதனைக்கு நடவடிக்கை..

யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகள் காணப்படுவதாக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சோதிநாதன் கூறியிருக்கின்றார். 

கைதடி முதியோர் இல்லத்தில் 41 முதியவர்களுக்கு கொரோனா தெற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இயங்கும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அங்கு தங்கியுள்ள ஏனைய முதியவர்களுகளில் பலருக்கு காய்ச்சல் அறிகுறி காணப்படும் நிலையில் முன்னேற்பாடாக இன்றைய தினம் வியாழக்கிழமை சுகாதாரத் தரப்பினரால் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக 

 அவர் மேலும் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு