யாழ்.மாவட்டத்தில் தொடர்ந்து உயரும் தொற்றாளர் எண்ணிக்கை! மேலும் 286 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடர்ந்து உயரும் தொற்றாளர் எண்ணிக்கை! மேலும் 286 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகம் மற்றும் சுகாதார பிரிவு இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது. 

இதன்படி மாவட்டத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 16 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 270 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இதன்படி சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 85 பேருக்கும், யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேருக்கும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 14 பேருக்கும்,

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 19 பேருக்கும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 41 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் காரைநகரில் 9 பேருக்கும், நல்லூரில் 14 பேருக்கும், 

சண்டிலிப்பாயில் 8 பேருக்கும், உடுவிலில் 11 பேருக்கும், தெல்லிப்பழையில் 2 பேருக்கும், பருத்தித்துறையில் 28 பேருக்கும், மருதங்கேணியில் 4 பேருக்கம், ஊர்காவற்றுறையில் ஒருவருக்கும், தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாவட்டத்தில் 2020 மார்ச்சிலிருந்து நேற்று மாலை வரை 12 ஆயிரத்து 746 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஆயிரத்து 161 குடும்பங்களைச் சேர்ந்த 

3 ஆயிரத்து 739 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு