கொரோனா தொற்றுடன் குழந்தை பிரசவித்த தாய் 10 நாட்களின் பின் மரணம்! குழந்தைக்கும் தொற்று, யாழ்.போதனா வைத்தியசாலையில் சோக சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுடன் குழந்தை பிரசவித்த தாய் 10 நாட்களின் பின் மரணம்! குழந்தைக்கும் தொற்று, யாழ்.போதனா வைத்தியசாலையில் சோக சம்பவம்..

கொரோனா தொற்றுடன் குழந்தை பிரசவித்த தாய் ஒருவர் 10 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

கிளிநொச்சியை சேர்ந்த சண்முகராசா பிரியதர்ஷினி(வயது32) என்ற பெண் கடந்த 15ம் திகதி காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. 

பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிரசவித்துள்ளார். குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், 

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த 26ம் திகதி தாயும், குழந்தையும் மாற்றப்பட்டனர். இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி தாயார் நேற்றிரவு உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டதுடன் பெண்ணின் சடலத்தை சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு