இந்திய மீனவர்களின் படகு மோதியதில் காணாமல்போயிருந்த யாழ்.வல்வெட்டித்துறை மீனவர்கள் மீட்கப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I
இந்திய மீனவர்களின் படகு மோதியதில் காணாமல்போயிருந்த யாழ்.வல்வெட்டித்துறை மீனவர்கள் மீட்கப்பட்டனர்..!

யாழ்.வல்வெட்டித்துறை கடலில் இந்திய இழுவை படகுகள் மோதியதால் சிதறுண்டு காணாமல் போயிருந்த இரு மீனவர்கள் இன்று மீட்கப்பட்டிருக்கின்றனர். 

நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்றிருந்த வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடியை சேர்ந்த இருவர் காணாமல்போயிருந்தனர். 

எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகள் வல்வெட்டித்துறை மீனவர்களின் படகுகள் மீது மோதியதில் சிதண்டு இருவர் காணாமல்போனதுடன், இருவர் கரைசேர்ந்தனர். 

இந்நிலையில் காணாமல்போனவர்களை தொடர்ந்து தேடிவந்த வல்வெட்த்துறை மீனவர்கள் கடலில் தொடர்புகளற்று தத்தளித்த இருவரையும் மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட மீனவர்கள் வல்வெட்த்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு