யாழ்.வல்வெட்டித்துறை கடலில் இந்திய இழுவை படகுகள் மோதியதில் வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்! இருவர் உயிர்தப்பினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை கடலில் இந்திய இழுவை படகுகள் மோதியதில் வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்! இருவர் உயிர்தப்பினர்..

யாழ்.வல்வெட்டித்துறை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய இழுவை படகுகள் மோதியதில் கடலில் மூழ்கிய 4 மீனவர்களில் இருவர் தப்பித்துள்ளபோதும், இருவர் காணாமல்போயுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வல்வெட்டித்துறை கடற்பகுதிக்குள் நுழைந்த இந்திய இழுவை படகுகள் வல்வெட்டித்துறை மீனவர்களின் படகுகள் மீது மோதியுள்ளன. 

சம்பவத்தில் ஒரு படகு கடும் சேதமடைந்த நிலையில் கரை திரும்பியுள்ளது. அதில் பயணித்த இருவர் அதிஸ்ட வசமாக கரை சேர்ந்துள்ளனர்.

மற்றைய படகில் பயணித்த வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த இராகவன், வளவன் ஆகிய மீனவர்கள் இருவரும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கின்றனர். 

மீனவர்கள் இருவரையும் தேடி கரையிலிருந்து மீனவர்கள் சென்று தேடுதல் நடத்தியபோதிலும் அவர்களைக் காணவில்லை என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு