யாழ்.தென்மராட்சியில் 112 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 85 பேருக்கு தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் 112 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 85 பேருக்கு தொற்று உறுதி!

தென்மராட்சியில் 112 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் சுமார் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது,

குறித்த பரிசோதனைகளில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 05 பேர் தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர்கள் என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,கைதடி முதியோர் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் முதியவர்கள் 41 பேர், ஊழியர்கள் 2 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் இன்று தென்மராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 112 அன்டிஜன் பரிசோதனைகளில் 85 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு