யாழ்.போதனா வைத்தியசாலையில் 129 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில்! 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் 129 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில்! 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 129 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. 

யாழ்.போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளிலும் கொவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு 

மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் 129 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர். 

அங்கு அமைக்கப்பட்டு 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 10 நோயாளிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.

உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் தினமும் 5 சடலங்கள் போதனா வைத்தியசாலை சவ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் சீரான ஒழுங்கமைப்பில் தினமும் உயிரிழந்தோரின் சடலங்கள் கோம்பயன் மணல் மயானத்தில்

 சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு