யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குள் ஊரடங்கை மீறி நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டிய பொலிஸார்!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குள் ஊரடங்கை மீறி நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டிய பொலிஸார்!

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி சிவனம்மன் கோவிலடி சுற்றாடலில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் இன்றையதினம் கோப்பாய் பொலிஸாரினால் விரட்டப்பட்டனர். 

அவ்விடத்தில் மரக்கறி வியாபாரிகள் ஒன்றுகூடி விற்பனையில் ஈடுபடுவதனால் அவ்விடத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நிலைமை காணப்பட்டது. அது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து 

அவ்விடத்திற்கு விரைந்தகோப்பாய் பொலிஸார் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை அவ்விடத்திலிருந்து விரட்டினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு