யாழ்.மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றிருந்த 40 பேருக்கு திடீர் அன்டிஜன் பரிசோதனை! 30 பேருக்கு கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றிருந்த 40 பேருக்கு திடீர் அன்டிஜன் பரிசோதனை! 30 பேருக்கு கொரோனா தொற்று..

யாழ்.பருத்தித்துறை - மந்திகை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு சென்றிருந்த சுமார் 40 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவெ அன்டிஜன் பரிசோதனையில் 75 சதவீத நேர்மறை முடிவாகும். அவர்கள் 30 பேரும் மருத்துவர்களின் ஆலோசனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியவர்கள், 

இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படவேண்டியவர்கள் மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என பிரித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு