யாழ்.குருநகர் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டுவந்த 6 ரவுடிகள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தகவல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகர் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டுவந்த 6 ரவுடிகள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தகவல்..!

யாழ்.குருநகர் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 6 பேர் இன்றைய தினம் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 

கடந்தவாரம் வீதியால் சென்ற கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களான வாள்வெட்டு குழு ரவுடிகள் தலைமறைவாக இருந்த நிலையில்

இதனால் விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 

6 ரவுடிகள் இன்றைய தினம் தமது சுய பாதுகாப்பு கருதி சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு