மன்னாரின் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்!

ஆசிரியர் - Admin
மன்னாரின் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்!

மன்னார் மாவட்ட மக்கள் சுகாதார நடை முறைகளை உரிய முறையில் பின் பற்றி தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தி தங்களையும், தங்கள் குடும்பங்களையும் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த மாவட்ட தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் மாவட்ட தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த வியடங்களை குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,560 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் 536 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மேலும் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னாரை சேர்ந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

கடந்த வியாழக்கிழமை 2 மரணம் இடம்பெற்றுள்ளன. இது வரை மன்னார் மாவட்டத்தில் 18 கொரோனா மரணம் இடம்பெற்றுள்ளன. மன்னார் மாவட்டத்தில் தற்போது 61 ஆயிரம் பேர் முதலாவது தடுப்பூசியையும், 52 ஆயிரம் பேர் இரண்டு தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று சுகாதார குழுவினர் தடுப்பூசியை வழங்கி வருகின்றனர்.

தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுவதோடு, தேவையின்றி நடமாடுபவர்களுக்கு ஆன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் திடீரென மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மன்னார் மாவட்ட தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகர் மேலும் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு