யாழ்.நகர், புறநகர் பகுதிகளில் பொலிஸார் தீடீர் சோதனை நடவடிக்கை! அத்தியாவசிய தேவையற்று வீதியில் அலைந்து திரிந்தோர் எச்சரிக்கப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகர், புறநகர் பகுதிகளில் பொலிஸார் தீடீர் சோதனை நடவடிக்கை! அத்தியாவசிய தேவையற்று வீதியில் அலைந்து திரிந்தோர் எச்சரிக்கப்பட்டனர்..

யாழ்.நகர்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் அநாவசியமாக பலர் நடமாடி திரிந்த நிலையில் , 

யாழ்.பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது , அநாவசியமாக வீதியில் நடமாடியோர் 

பலரை மறித்து சோதனைக்கு உட்படுத்தியதுடன் அவர்களின் விபரங்களை பதிந்த பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 

 அதேவேளை, அநாவசியமாக வீதியில் நடமாடியோர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு