உயர்ந்த மனிதத்துவத்தை வெளிப்படுத்திய யாழ்.இணுவிலை சேர்ந்த பெற்றோர்! யாழ்.போதனா வைத்தியசாலை சாதனை..

ஆசிரியர் - Editor I
உயர்ந்த மனிதத்துவத்தை வெளிப்படுத்திய யாழ்.இணுவிலை சேர்ந்த பெற்றோர்! யாழ்.போதனா வைத்தியசாலை சாதனை..

விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்த இளைஞனின் சிறுநீரகங்களை இரு நோயாளிகளுக்கு பொருத்தி யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் சாதனை புரிந்துள்ளதுடன், இணுவிலை சேர்ந்த பெற்றோர் உயர்ந்தபட்ச மனித தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். 

இணுவிலைச் சேர்ந்த தங்கராசா பிரிஞ்சன் என்கிற இளைஞர் விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த நிலையில் அவருடைய இரண்டு சிறுநீரகங்களையும் பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர், அவை இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நோயாளிகளுக்கு மாற்றப்பட்டது. 

இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் உயிர் வாழ்ந்த இருவருக்கே  சிறுநீரகங்கள் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை நிபுணர்கள், உணர்வழியியல் நிபுணர்கள், சிறுநீரக நிபுணர்கள் மூலம் மாற்றப்பட்டது. 

கண்டியிலிருந்து சத்திரசிகிச்சை நிபுணரொருவர் அழைத்து வரப்பட்டு உதவிகளும் பெறப்பட்டது.அதிகரித்த கோவிட் நோயாளர்கள் மத்தியிலும் கடந்த 18ஆம் திகதி சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பலமணி நேரத்தையும் தாண்டி 

வெற்றிகரமாக நடைபெற்றதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சிறீபவனந்தராஜா தெரிவித்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே,

வட மாகாணத்தில் நடத்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தனிநபர் என்பதை தாண்டி ஒருங்கிணைந்து எல்லோருடைய கூட்டு முயற்சியால் வெற்றிகரமாக அமைந்ததென சத்திரசிகிச்சையில் பங்கேற்ற வைத்தியர்கள் கருத்து தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இனி வருங்காலங்களில் இதனை மேற்கொள்வதற்கு நாங்கள் ஒருசில கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இது பற்றிய போதிய அறிவு இருந்தும் ஆளணி பற்றாக்குறை,கட்டமைப்பின்மை போன்ற பல சிக்கல்களால் 

இதனை செய்ய முடியாமல் இருந்தது. இவை காலப்போக்கில் சரிவரும்போது இதனை தொடர்ந்து செய்யமுடியும் என்றனர். சிறுநீரகம் இரண்டையும் தானமாக வழங்க முன்வந்த அந்த இளைஞனின் பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் 

வைத்தியசாலையினரால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு