பேராபத்தில் யாழ்.மாவட்டம்! 9 மரணங்கள் கொரோனா மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
பேராபத்தில் யாழ்.மாவட்டம்! 9 மரணங்கள் கொரோனா மரணங்கள் பதிவு..

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 கொரோனா தொற்று மரணங்கள் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

மேலும் இதுவே யாழ்.மாவட்டத்தில் ஒரு நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும். இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேரும், 

கொடிகாமத்தில் 2 பேரும், வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்த இளைஞன் உட்பட இன்று 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. 

குறித்த 9 மரணங்களில் ஒருவர் வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும், மற்றய 8 பேரும் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது. 

இதன்படி திருநெல்வேலியைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவரும், கொடிகாமத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரும், வவுனியாவைச் சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும்,

கொக்குவிலையைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும், நவாலியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும்,

கொடிகாமத்தைச் சேர்ந்த 80 மற்றும் 70 வயதுடைய ஆண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை

209 ஆக உயர்ந்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு