யாழ்.கொடிகாமத்தில் கொரோனா தொற்றினால் 3 பேர் உயிரிழப்பு, சாவகச்சோி நகரில் எழுமாற்று பரிசோதனையில் 16 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் கொரோனா தொற்றினால் 3 பேர் உயிரிழப்பு, சாவகச்சோி நகரில் எழுமாற்று பரிசோதனையில் 16 பேருக்கு தொற்று..

யாழ்.கொடிகாமம் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரீவு தகவல்கள் தொிவிக்கின்றனர். 

கொடிகாமம் மத்தி, கெற்பேலி, அல்லாரை பகுதிகளை சேர்ந்த 47, 70, 80 வயதான 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

அவர்களில் 47 வயதான நபர் கொடிகாமம் சந்தை தொகுதியில் தையல் கடடை வைத்திருப்பவர் எனவும் உயிரிழந்த இருவர் சாவகச்சோி வைத்தியசாலையிலும்,

உருவர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சாவகச்சோி நகரில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில்

16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு