யாழ்.குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான 24 வயது இளைஞன் உயிரிழப்பு! மேலும் இருவர் சிகிச்சையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான 24 வயது இளைஞன் உயிரிழப்பு! மேலும் இருவர் சிகிச்சையில்..

யாழ்.குருநகர் கடற்கரை வீதி திருச்சிலுவை சுகநல சேவை நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வாள்வெட்டு குழுவின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார். 

நேற்று மாலை 3 இளைஞர்கள் மீது வாள்வெட்டு கும்பல் துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தில் 3 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

அவர்களில் ஒருவரான குருநகரை சேர்ந்த ஜெனரன் (வயது24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பொலிஸார் வீதிக்கு வீதி நின்று மோட்டார் சைக்கிளிளுக்கு

காப்புறுதி, வரிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளதா? என சோதித்துவரும் நிலையில் வாள்வெட்டு சம்பவம் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு