யாழ்.தொண்டமனாறு கடற்பகுதியில் கடற்படை அதிரடி! 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.தொண்டமனாறு கடற்பகுதியில் கடற்படை அதிரடி! 3 பேர் கைது..

யாழ்.தொண்டமனாறு கடற்பகுதியில் கடற்படையினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் சுமார் 168 கிலோ கேரள கஞ்சாவுடன் சுமார் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், படகும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தொண்டமனாறு கடற்பரப்பின் ஊடாக கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து 

குறித்த கடற்பகுதியில் கடற்படையினர் விசேட சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தியிருக்கின்றனர்.இதன்போது வள்ளத்தில் ஏற்றிவிடபபட்ட கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு