யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆரம்பமானது! 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளிலேயே தடுப்பூசி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆரம்பமானது! 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளிலேயே தடுப்பூசி..

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக இராணுவ மருத்துவப் பிரிவினர் நடமாடும் கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். 

இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்த சிறப்பு வேலைத்திட்டம் இராணுவத்தின் 512வது பிரிகேட் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வீடுகளுக்கு சென்றுகொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் 

இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏற்கனவே நாடு பூராகவும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்.மாவட்டத்தில் குறித்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி 

மற்றும் யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு