யாழ்.பொன்னாலையில் இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொன்னாலையில் இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு..!

யாழ்.பொன்னாலையில் படையினர் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியிடம் விளக்கம் கோரியுள்ளது.

ஆணைக்குழுவின் 14 ஆவது உறுப்புரைக்கு அமைய, ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது. என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பதிகாரி ரி.கனகராஜ் தெரிவித்தார்.

இதன் பிரதி யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு