யாழ்.பருத்தித்துறை வியாபாரிமூலையில் முதியவர் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை வியாபாரிமூலையில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்.பருத்தித்துறை - வியாபாரிமூலை பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

அப்பகுதியில் இயங்கிவரும் ஐஸ் தொழிற்சாலைக்கு அண்மையாக குறித்த முதியவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடம் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை சடலமாக காணப்படுபவர் இராஜகிராமம், கரவெட்டியைச் சேர்ந்த 

வைரவா - நாகரத்தினம் (78 வயது) என்பவர் எனத் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் 

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டே இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு