யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்! மாவட்டத்தில் 111 பேர் உட்பட வடக்கில் 138 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்! மாவட்டத்தில் 111 பேர் உட்பட வடக்கில் 138 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 111 பேர் உட்பட வடமாகாணத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 523 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் 111 பேருக்கு தொற்று

போதனா வைத்தியசாலையில் 48 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 18 பேர்,வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 10 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 08 பேர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், வீனஸ் தனியார் வைத்தியசாலையில் ஒருவர்,

நொதேர்ன் சென்றல் தனியார் வைத்தியசாலையில் ஒருவர், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், 

கிளிநொச்சி மாவட்டத்தில் 11 பேருக்கு தொற்று

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 09 பேர், மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், 

வவுனியா மாவட்டத்தில் 08 பேருக்கு தொற்று

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 05 பேர், வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் கடற்படை முகாமில் ஒருவர், வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் ஒருவர், இரமணை மடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்,

இரணைமடு விமானப்படை முகாமில் ஒருவர், பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு